புதுச்சேரி-புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதியில் ரங்க ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது. இங்கு, அத்தி மரத்தால் செய்யப்பட்ட ஆனந்த ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இந்த மடத்தில் மார்கழி மாகோற்சவம் நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் காலையில் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வரும் ஜனவரி 14ம் தேதி வரை நடக்கும் இந்த மகோற்சவத்தில் தினசரி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தினமும் காலை 5 மணிக்கு ஆண்டாள் அரங்க பஜனை மண்டலியினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்கும் திருவீதி பஜனை, காலை 6.30 மணிக்கு திருப்பாவை சொற்பொழி, தினசரி காலை 7 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி அன்புசெல்வன், தேவநாத ராமானுஜ தாசர், பாலாஜி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.