பதிவு செய்த நாள்
19
டிச
2021
07:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா, ராப்பத்து 6ம் நாளில் நம்பெருமாள் அகலகில்லேன் இறையும் என்ற பாசுரத்திற்காக சௌரி-ராஜ முடியில் புஜகீர்த்தியும், நகரியும், நடுவில் பெரிய பிராட்டியார் பதக்கமும், திருமார்பில் விமான பதக்கமும், ரத்தின அபய ஹஸ்தமும், நெல்லிக்காய் மாலை, காசு மாலை, 8வட முத்து சரம், தங்க பூண் பவழ மாலை, அடுக்கு பதக்கங்கள், பின் சேவையாக அண்டபேரண்ட பக்ஷி பதக்கமும் சாற்றி ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள் 4ம் தேதி முதல், உற்சவ நாட்களில் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவத்தின் 6ம் நாளான இன்று (டிச.,19) நம்பெருமாள் அகலகில்லேன் இறையும் என்ற பாசுரத்திற்காக சௌரி-ராஜ முடியில் புஜகீர்த்தியும், நகரியும், நடுவில் பெரிய பிராட்டியார் பதக்கமும், திருமார்பில் விமான பதக்கமும், ரத்தின அபய ஹஸ்தமும், நெல்லிக்காய் மாலை, காசு மாலை, 8வட முத்து சரம், தங்க பூண் பவழ மாலை, அடுக்கு பதக்கங்கள், பின் சேவையாக அண்டபேரண்ட பக்ஷி பதக்கமும் சாற்றி ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 24ம் தேதி வரை ராப்பத்து நிகழ்ச்சி நடக்கும்.