பதிவு செய்த நாள்
23
டிச
2021
11:12
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதி விநாயகர் கோவில்களில் நேற்று மாலை சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பவுர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே, மாத சங்கடஹர சதுர்த்தியாக பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில், பக்தர்கள் விரதமிருந்து விநாயகப்பெருமானை வழிபடுகின்றனர்.நேற்று இம்மாதத்துக்கான சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.
உடுமலை குட்டைத்திடல், சித்தி, புத்தி விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், குபேர விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொள்ளாச்சிபொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமான், வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், விநாயகருக்கு, நேற்று மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடைபெற்றது. பூஜையில் சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.