பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
12:07
ஆத்தூர் : சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடந்தது. சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்குபூஜை நடந்தது. திருச்செந்தூர் பாரத திருமுருகன் திருச்சபை சார்பில் நடந்த இந்த பூஜையை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் துவக்கி வைத்தார். மாவட்ட ஆலோசகர் கூட்டாம்புளி சீனிவாசகம் முன்னிலை வகித்தார். பூஜையை ஒட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும், நந்திபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகப்பெருமான், சொக்கநாதர், மீனாட்சிஅம்மன், நந்திபெருமான், சைவகுரவர், 63 நாயன்மார்கள், அகத்தியர், சப்தகன்னியர் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. பவுர்ணமியை ஒட்டி நடந்த சிறப்பு அன்னதானத்தை கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார். பூஜை நிகழ்ச்சிகளில் திருச்சபை மாவட்ட செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் சங்கரகுற்றாலம், வட்டார கௌரவ ஆலோசகர் ஜெயலெட்சுமி, ஜெயகனி அம்மாள், திருச்செந்தூர் ஆலோசகர் அம்மமுத்து ஓதுவார், மணிசாஸ்திரி, உடன்குடி பரமசிவன் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பெண்களும், பக்தர்களும் பங்கேற்றனர்.