பதிவு செய்த நாள்
07
ஜூலை
2012
11:07
தூத்துக்குடி:தூத்துக்குடி முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா நடந்தது.கடந்த 26ம் தேதி கணபதி ஹோமம், கும்பபூஜை, புன்யாவாஸனத்துடன் கால் நட்டுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையை கோயில் தலைவர் கோட்டுராஜா விளக்கேற்றி துவக்கி வைத்தார். கன்னிவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மதியம் முத்துமாரியம்மனுக்கு மதிய கொடையும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.மாலையில் அம்மன் ஊர் சுற்றி வரும் நிகழ்ச்சியும், இரவு முளைப்பாரி, 504 மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் கிளை மேலாளர் குருசாமி துவக்கி வைத்தார். இரவு சாமக்கொடை நடந்தது. அதிகாலை முத்துமாரியம்மன் சப்பரத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், கோயிலில் பொங்கலிட்டு மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் கோட்டுராஜா, துணைத் தலைவர் சின்னமணி, செயலாளர் ஞான்ராஜ், பொருளாளர் பழனிகுமார், துணைச் செயலாளர் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் பழனிகுமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்