Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழா ... கோபால்பட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா கோபால்பட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் ஜெயந்தி : ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
அனுமன் ஜெயந்தி : ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

02 ஜன
2022
12:01

திருவாரூர்: ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் மார்கழி அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஜனவரி 2-ஆம் நாளான இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமி பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாஸ்வாமிகளின் முன்னிலையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணி முதல் மகா சுவாமிகள் முன்னிலையில் கோவில் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி சுவாமியை ஆராதனை செய்யும் நிகழ்வும், மாலை வெள்ளித்தேர் உலாவும் நடைபெறுகிறது. இன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பிரசாதமாக வழங்கப் பட உள்ளது. இந்த அனுமன் ஜெயந்தி விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் பகவானின் திருவருளையும், மஹாஸ்வாமிகளின் குருவருளையும் பெற வேண்டுமாய் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அறங்காவலர் ஜெகன்நாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar