சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2022 01:01
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் ஆண்டாள் ரங்கமன்னார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, சிறப்பு அலங்காரத்தில் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிக்கிறார். அனுமந்த் ஜெய்ந்தியை முன்னிட்டு அனுமான் சஞ்சீவி ஆஞ்சநேயராக அருள்பாலித்தார். பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8:30 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.நாளை 3ம் தேதி பகல்பத்து உற்சவம் துவங்கி வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. பகல்பத்து உற்சவத்தில் தினமும் காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 4:30 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடும் நடக்கிறது.