பதிவு செய்த நாள்
09
ஜூலை
2012
11:07
சென்னை: ஆடி அமாவாசையையொட்டி, தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில், "ஆடி அமாவாசை சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சுற்றுலா, வரும் 16ம் தேதி, இரவு 8 மணிக்கு புறப்பட்டு, 17ம் தேதி காலை மதுரை சென்றடையும். அங்கு, மீனாட்சி அம்மன் கோயில், சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில் ஆகிய இடங்களை பார்த்து விட்டு, ராமேஸ்வரத்தில் இரவு தங்கி, 17ம் தேதி, ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள முக்கிய இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, திருச்சி வழியாக, 19ம் தேதி காலை 6 மணிக்கு, சென்னை வந்தடைகிறது. "சுற்றுலா செல்ல விரும்புவோர், 2538 2916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.