பதிவு செய்த நாள்
04
ஜன
2022
04:01
பழநி: பழநி மலைக்கோயில் கிரி வீதி, சன்னதி வீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
பழநிக்கு வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் மலைக்கோயில் சுவாமி தரிசனத்திற்கு வருகை புரிகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, சாலையோர, தரைவிரிப்பு, இருசக்கர வாகன கடைகள், மலைக்கோயில் அடிவாரம் கிரி வீதி சன்னதிவீதிகளில் ஆக்கிரமித்துள்ளன. வின்ச் ஸ்டேஷன், பாத விநாயகர் கோயில், குடமுழுக்குமண்டப வாயில், தேவஸ்தான அலுவலக வாயில் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பேன்சி,அல்வா, துணி,பூஜை பொருட்கள், பொம்மைகள், டாட்டூ, சிற்றுண்டி கைகள் ஏராளமான அமைத்துள்ளனர்.
சன்னதி வீதி, கிரி வீதியின் நடுவில் இருசக்கர வாகன, கையில் தட்டு, பொருள் வைத்து விற்கும் வியாபாரிகள், தரையில் அமர்ந்து டாட்டூ வரையும் நபர்கள் செய்து வருகின்றனர். பக்தர்கள் சுற்றுலா வாகன நிலையத்திலிருந்து படிப்பதை, வின்ச் ஸ்டேஷன் ஆகிய பகுதிகளுக்கு வரவும், கிரிவலம் வரும் பக்தர்களும் அவதிப்படுகின்றனர். சில வியாபாரிகள் பக்தர்களை வலுக்கட்டாயமாக வழிமறித்து பொருட்களை வாங்க வற்புறுத்துகின்றனர். இதனால் இடையூறு ஏற்படுகிறது வீதிகளில் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ, குதிரைவண்டி உள்ளிட்ட வாகனங்கள் வருவதால் மேலும் இடையூறு ஏற்படுகிறது. நீதிமன்ற ஆணை இருந்தபோதிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வெறும் கண்துடைப்பாக உள்ளது. எனவே அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற கிரி வீதி மற்றும் சன்னதி வீதிகளில் பக்தர்கள் இடையூறு இல்லாமல் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.