அவலூர்பேட்டை: வடுகப்பூண்டியில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அவலூர்பேட்டையை அடுத்த வடுகப்பூண்டி கிராமத்தில் புரவடை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஸ்பர்சாஹூதி தத்வார்ச்சனை, நாடி சந்தானமும், மகா பூர்ணாஹூதி யாத்ரா தானமும் நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு ஸ்தூபி கோபுர கும்பாபிஷேகம், மூலவர் மகா காளியம்மன், வினாயகர் மகா கும்பாபிஷேகம் நடந்தது.