பழநி: தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டால் முழு ஊரடங்கால் பழநி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. பழநியில் இன்று தைப்பூச திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கோவிட்19 பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்தது. இதனால் நேற்று பழநி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பழநி அடிவாரம் பகுதியில் வருகை புரிந்த பாதயாத்திரை பக்தர்கள் மிகச்சிலரே வருகை புரிந்தனர். குறைந்த அளவில் வந்த பக்தர்கள் கோயில் வாயிலில் நின்று தரிசனம் செய்து சென்றனர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பேருந்து வசதிகள், உணவு வசதிகள் இல்லை. ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய நபர்களை போலீசார் எச்சரித்து, அறிவுரை கூறி, அபராதம் விதித்தனர்