பதிவு செய்த நாள்
17
ஜன
2022
12:01
நாமக்கல் : தை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாமக்கல்லில் ஒரே கல்லால், 18 அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுவதுண்டு. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 18 வரை அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, தை முதல் ஞாயிறான நேற்று காலை, 5:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஊரடங்கு காரணமாக, உள்ளூர் பக்தர்கள் கூட இல்லாமல் மிகவும் எளிமையாக நிகழ்ச்சி நடந்தது.