பதிவு செய்த நாள்
17
ஜன
2022
04:01
ஸ்ரீபெரும்புதுா : ஸ்ரீபெரும்புதுார் குருபுஷ்ய விழா கொரோனா ஊரடங்கால் நேற்று எளிமையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் உள்ளது. இங்கு, ராமானுஜர் வாழ்ந்த காலத்தில், தை மாதம், பூச நட்சத்திரத்தில், ராமானுஜரின், தானுகந்த திருமேனி சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் தை மாதம், மூன்று நாட்கள் குருபுஷ்யம் விழாவாக, ஸ்ரீபெரும்புதுாரில் கொண்டாடப்படுகிறது. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று, குருபுஷ்ய விழா, கோவில் பணியாள்கள் மட்டும் பங்கேற்று எளிமையாக நடந்தது.