பதிவு செய்த நாள்
17
ஜன
2022
05:01
எரியோடு: தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்காக சூரிய உதயம் அறக்கட்டளை, ஸாத்வீஹம் ஆன்மிக அன்னதான சேவா குழு சார்பில் எரியோட்டில் பாத சேவை, மருத்துவ, அன்னதான சேவை முகாம் நடந்தது.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட பக்தர்கள் எரியோடு வழியே பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். பக்தர்களில் பலருக்கு கால்வலி, சுழுக்கு, ரத்தக்கட்டு, பாதங்களில் கொப்புளம், காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. பக்தர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 8வது ஆண்டாக எரியோடு நால்ரோடு சந்திப்பில் சூரிய உதயம் அறக்கட்டளை, ஸாத்வீஹம் ஆன்மிக அன்னதான சேவா குழு சார்பில் பாத சேவை மருத்துவ முகாம் நடந்தது. தொண்டர்கள் பக்தர்களின் கால்களுக்கு மருந்து தடவியும், அன்னதானம் வழங்கியும் சேவை வழங்கினர். நிறுவனத் தலைவர் குமார் தலைமை வகித்தார். டாக்டர்கள் ராஜேந்திரன், வடிவேல் பக்தர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.