செஞ்சி: தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா நடந்தது.
செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று தைப்பூச விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 7 ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 9 நாட்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தீபாராதனையும் நடந்து வந்தது. நேற்று காலை 5 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு மகா அபிஷேகமும், அலங்காரம் செய்தனர். 8 மணிக்கு தீபாராதனையும், பகல் 12 மணிக்கு காவடி அபிஷேகம், அலகு குத்தி தேர் இழுத்தல், காவடி ஊர்வலம் நடந்தது. மதியம் 1 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகமும், விபூதி அலங்காரமும் செய்தனர் 2.30 மணிக்கு கோவில் குருக்கல் அருட்பெருஞ்ஜோதி சாமியின் மார்பின் மீது மாவு இடித்தல் மற்றும் மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. 4 மணிக்கு செடல் சுற்றுதலும், தீமிதி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.