திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவிலில் தைப்பூசத் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2022 01:01
தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திருச்சேறை உள்ள சாரநாத பெருமாள் கோவிலில், தைப்பூச திருவிழாவில் தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையடுத்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடாழ்வார் அச்சிட்ட கொடியை மங்கள வாத்தியம் முழங்க ஏற்றப்பட்டு விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(19ம் தேதி) நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு உற்சவப் பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் காணுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.