திருமலைக்கேணியில் பக்தர்கள் கோவில் முன்பு விளக்கேற்றி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2022 03:01
கோபால்பட்டி: திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தன்று நடை அடைக்கப்பட்டதால், பக்தர்கள் கோவில் முன் உள்ள கொடிக்கம்பத்தில் விளக்கேற்றி தரிசனம் செய்து சென்றனர்.
கோபால்பட்டி அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலாகும். அதனால் தைப்பூசம் போன்ற விசேஷ தினங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் இக்கோவிலில் தரிசனத்திற்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக தைப்பூசத்தன்று கோவில்களை திறக்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும் திருமலைக்கேணியில் நேற்று தைப்பூசத்தன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் கோவில் நடை காலை முதலே அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு வந்த பக்தர்கள் அனைவரும் கோவில் முன் உள்ள கொடிக்கம்பத்திலும், படிகளிலும் விளக்கேற்றி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.