சாணார்பட்டி: தைப்பூச விழாவை முன்னிட்டு கோபால்பட்டி அருகே உள்ள சிவதாண்டவபாறை பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. வேம்பார்பட்டி பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.