அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே குறவன்குளத்தில் ஆதி குரு சித்தர் கோயிலில் தை பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.