பதிவு செய்த நாள்
20
ஜன
2022
09:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசான்ய குளத்தில் நடக்கும் தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, ஈசான்ய குளக்கரையில் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, சிறப்பு அபி ேஷகம், பூஜை செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதை தொடர்ந்து, திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜா, அருணாசலேஸ்வரரிடம் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டபோது, அருணாசலேஸ்வரரே, அவருக்கு மகனாக பிறந்தார். இதை நினைவு கூறும் வகையில், போரில் சண்டையிட்டு கொண்டிருந்த வள்ளாள மஹாராஜா உயிரிழந்ததாக, தீர்த்தவாரியில் பங்கேற்ற அருணாசலேஸ்வரரிடம், கோவில் ஓதுவார் தகவல் தெரிவிக்க, அங்கிருந்து மேள, தாளம் இல்லாமல், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் கோவிலுக்கு திரும்பும் நிகழ்வு நடந்தது.