Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் ... பழநி தைப்பூச விழாவில் தெப்பதேர் உற்சவம் பழநி தைப்பூச விழாவில் தெப்பதேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு பின் கிடைத்தது சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு பின் கிடைத்தது சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
09:01

பழநி,:பழநி தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், கோவில் மூடப்பட்டதால் அங்கேயே தங்கியிருந்து, ஐந்து நாட்களுக்கு பின் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தைப்பூச திருவிழா ஜன., 12ல் துவங்கியது; நேற்று தேரோட்டம் நடந்தது. ஜன., 14 முதல் ௧8 வரை கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில் மூடப்படுவதாகவும், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்திருந்தது. நேர்த்திக்கடன் செலுத் தும் நோக்கில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக பழநிக்கு வந்தனர்.

தரிசனத்திற்கு அனுமதி மறுத்த நாட்களில் ஊர் திரும்பாமல், பழநியில் உள்ள மடங்கள், மண்டபங்கள், கிரிவீதி மற்றும் பொது இடங்களில் தங்கினர்.ஐந்து நாட்களுக்கு பின் நேற்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் கிரிவலப் பாதையில் கும்மியடித்து, காவடி ஆட்டம் ஆடி, அலகு குத்தி, மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்டம் அதிகம் இருந்ததால், சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்கள் நான்கு மணிநேரம் வரை வரிசையில் காத்திருக்க நேரிட்டது. ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ராமேஸ்வரம் கோவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்ட ராமேஸ்வரம் கோவிலும், ஐந்து நாட்களுக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவில் அக்னி தீர்த்த கடலில் நீராடியதுடன், கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் முக கவசம் அணிந்தபடி சுவாமி, அம்மன் சன்னதியில் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar