பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே உள்ள உஜ்ஜையனூர் முருகன் கோவிலில் தைப்பூச காவடி திருவிழா நடந்தது.
இக்கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு கல்யாண சுப்பிரமணியசாமிக்கு தைப்பூச விழா, கொடி கட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், மாலை போடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஆறு நாட்கள் காவடி ஊர்வலம் நடந்தது. செவ்வாய்க்கிழமை தைப்பூசம் நிகழ்ச்சி மற்றும் அலங்காரம், அபிஷேக பூஜை, அன்னதானம் நடந்தது. நேற்று முன்தினம், காவடி புறப்பாடு மற்றும் பால்குடம் எடுத்தல் மற்றும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உஜ்ஜையனூர், தடாகம் புதூர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.