சாத்துார்: சாத்துார் யாதவர் நந்தவனத்தில் தைபூசம்ஜோதி பெருவிழா விசுவ இந்து பரிஷத் கட்சி சார்பில் நடந்தது விருதுநகர் மாவட்ட செயலாள் வெங்கடசாமி தலைமை வகித்தார். மங்கையர்க்கரசி மாதர் சங்கத்தினர் திருட்பா அகவல், பாராயணம், திருத்தங்கல் ஓதுவார் மூர்த்திகள் சிவராமன் திருமுறை பாராயணம் அருளினார். ஸ்ரீ சுதர்சன் சுவாமி நே்த்ரம் யாண்டேஷன் நிறுவனத் தலைவர் வேத மந்திரங்கள் முழங்க விநாயகர் பூஜையும் அருணாமேச் ஒர்க்ஸ் ராஜா சன்மார்க்க கொடி ஏற்றினார். பின்னர் 7 மாயா திரைகள் நீக்கப் பெற்று அருட்பெருஞ்சோதிதரிசனமும் தீப ஆராதனையும் நடந்தது.பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பூந்தி, வெங்காய கூட்டு, சாம்பார் சாதம் பிரசாதமாக வழங் கபட்டது.விழாவில் பலர் கலந்து கொண்டனர்.