Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... திருத்தணி முருகன் கோயிலில் காத்திருந்து தரிசன செய்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வழிபடும் விநோதத் திருவிழா
எழுத்தின் அளவு:
ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வழிபடும் விநோதத் திருவிழா

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
04:01

காரைக்குடி:  கல்லல் அருகேயுள்ள தேவபட்டு கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வழிபடும் பாரம்பரிய வினோத பொங்கல் திருவிழா நடந்தது.

கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவபட்டு கிராமத்தினர் ஆண்டுதோறும் நெல் அறுவடைக்கு பின்பு அந்தரநாச்சியம்மனுக்கு நன்றி சொல்லும் விதத்தில் செவ்வாய் பொங்கல் வைத்து வழிபாடு செய்து மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். பாரம்பரியமான இவ்விழாவில் பெண்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். தேவபட்டு கிராமத்தை சேர்ந்த ஆண்கள், கிராமத்தில் இருந்து மண்பானைகள், காய்கறிகளுடன் ஊர்வலமாக மணிமுத்தாறு ஆற்றை வந்தடைவர். ஆற்றின் கரையில், ஊற்று தோண்டி பனை ஓலையில் தண்ணீர் அள்ளி மண்பானையை நிரப்புவர். பின்பு, ஊர்வலமாக அந்தர நாச்சியம்மன் கோயில் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவர். நேற்று ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு நடைபெறும் பாரம்பரிய பொங்கல் விழா நடந்தது. தொடர்ந்து, மஞ்சுவிரட்டு விழாவும் நடந்தது. பாரம்பரியமாக நடைபெறும் இந்த பொங்கல் விழாவால், கால்நடைகளும் விவசாயமும், பன்மடங்கு செழிக்கும் என்பது தங்களது நம்பிக்கை என கிராம மக்கள் தெரிவித்தனர். இதில் கல்லல், காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar