பழநி: பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று எடப்பாடி பக்தர்கள் காவடிகளுடன் குவிந்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த பருவதராஜகுல சமுதாயத்தினர் 360 ஆண்டுகளுக்கும் மேலாக பழநி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் முதல் பஞ்சாமிர்தம் தயாரிக்கத் துவங்கினர். 50 ஆயிரத்திற்கும் மேல் வருகை புரியும் பக்தர்களுக்கு 20 டன் பஞ்சாமிர்தம் தயார் செய்யப்பட்டது. நேற்று (ஜன 26) பால் காவடி, புஷ்ப காவடி, சர்க்கரைக் காவடி,இளநீர் காவடி, ஆகியவற்றுடன் சேலம்,சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வழியாக பழநி வந்து சேர்ந்தனர். மானூர் சண்முகநதியிலிருந்து ஆட்டம் பாட்டத்துடன் மலைக்கோயில் வந்து சேர்ந்தனர். மலைக்கோயிலில் பூ கோலமிட்டு சாயரட்சை பூஜையில் தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு 500 நபர்கள் இரவில் மலைக்கோயிலில் தங்கி வழிபாடு செய்தனர். பழநி மலைக்கோயிலில் இரவில் தங்க பருவதராஜகுல சமுதாய மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.