Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவில் ... திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில் கும்பாபிஷேகம்.
எழுத்தின் அளவு:
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில் கும்பாபிஷேகம்.

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
11:01

திருமுல்லைவாசல்: முல்லைவன நாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் நான்கு ஆதீன குருமகா சன்னிதானங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் தருமபுரம் ஆதினத்தில் அணிகொண்ட கோதை அம்பாள் சமேத முல்லைவன நாதர் கோவில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை ஆறாம் கால யாகபூஜைகள் முடிவடைந்தது தொடர்ந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதினம் கந்த பரம்பரை 28வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகாசந்நிதானம் சக்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் கும்பாபிஷேகத்தில் சிதம்பரம் மௌன குருசாமிகள், தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனார் கோவில் ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன திருக்கோவில்கள் தலைமை கண்காணிப்பாளர் மணி, கோவில் கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்  கோவிலுக்குள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவில் தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar