ஜம்புலிப்புத்தூர்: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் தை மாதம் 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.