பாலமேடு: பாலமேடு அருகே சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.பிப்.,4 கணபதி ஹோமம் துவங்கி மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தன.நேற்று காலை புனித தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மங்கள இசையுடன் கடம் புறப்பாடு நடந்தது.கோயில் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி சிவாச்சார்யார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.