Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் ... தியாகராஜர் கோவில் பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் கட்டுமானம் அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2022
05:02

சென்னை : அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில், புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தொலைவில், புதிய கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது? என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

புராதன சின்னம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, டி.மாங்குடியைச் சேர்ந்த, வழக்கறிஞர் பாலகுரு என்பவர் தாக்கல் செய்த மனு:அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சியில், மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டது. இதற்கு, ஆயிரம் ஆண்டு வரலாறு உள்ளது. உலக புராதன சின்னமாக, யுனெஸ்கோ அறிவித்து உள்ளது. தற்போது, தொல்லி யல் துறையின் கட்டுப்பாட்டில் இந்தக் கோவில் உள்ளது.கோவிலில், 3 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்க உள்ளதாக செய்தி வெளியானது. நேரில் சென்று பார்த்தபோது, கோவிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் புத்தக கடை, உணவகம், கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கான வசதியை, பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் மேற்கொள்ளலாம்.எனவே, கோவிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில், மேற்கொண்டு கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.

புதிதாக மேற்கொண்ட கட்டுமானங்களை அகற்றி, பழைய நிலைக்கு வரவும்உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.தொல்லியல் துறைமனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. புராதன சின்னத்தில் இருந்து, எவ்வளவு தொலைவில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறித்து, தொல்லியல் துறை மற்றும் அறநிலையத் துறையிடம் விளக்கம் பெறும்படி, அரசு பிளீடருக்கு உத்தரவிட்டு, விசாரணையை முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar