மதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1431 பசலி மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று இரண்டாம் திருநாள் காலை கேடயத்தில் திருவீதி உலா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அரசு வழிகாட்டுதலின்படி பத்தர்கள்இறைவன் தரிசனம் செய்தனர். பிப்.,18ம் தேதி பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. சிவகங்கை சமஸ்தானம், மதுராந்தகிநாச்சியார் அவர்களின் நிர்வாக்த்திற்குட்பட்ட இக்கோயிலில், விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.