சாயல்குடி: நரிப்பையூர் அருகே என் புது கிராமத்தில் பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, கும்பம் பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10 மணியளவில் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை தனசேகரன், ஜெயந்திலால் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.