Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிம்மதிக்கு வழிகாட்டும் மஞ்சுநாதர் ஆத்ம ஞானம் என்றால் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
குருவாயூரப்பனுக்கு குண்டுமணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2022
02:02


குருவாயூர் கோயிலில் பெரிய உருளி ஒன்றில் குண்டுமணி நிரப்பியிருக்கும். நினைத்தது நிறைவேறவும், நோய்களில் இருந்து விடுபடவும் பக்தர்கள் குண்டுமணிகளைக் கைகளால் எடுத்து மீண்டும் அதிலேயே இடுவர்.  
இதன் பின்னணியில் வரலாறு உண்டு. ஒரு காலத்தில் வயதான கிருஷ்ண பக்தை ஒருவரது ஊர் குருவாயூருக்கு வெகுதுாரத்தில் இருந்தது. குருவாயூரப்பனை தரிசிக்க விரும்பிய அவர் காணிக்கை தர ஆசைப்பட்டார். அவரது வீட்டில் மஞ்சாடி மரம் (குண்டுமணி மரம்) ஒன்று இருந்தது. அதிலிருந்து விழுந்த குண்டுமணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். குருவாயூரை அவர் அடைந்த போது மன்னர் ஒருவர் குருவாயூரப்பனுக்கு யானையை காணிக்கையாக வழங்க காத்திருந்தார். அதற்காக கோயிலில் அரண்மனைச் சேவகர்கள் பரபரப்புடன் செயல்பட்டனர். அவர்களின் அலட்சிய போக்கால் பக்தை கீழே தள்ளப்படவே, அவரது கையில் இருந்த குண்டுமணிகள் சிதறின. செய்வதறியாமல் கண்ணீர் சிந்தினார்.
அந்த நேரத்தில் மன்னர் அளித்த யானைக்கு மதம் பிடித்தது. யாராலும் அதை அடக்க முடியவில்லை. அப்போது ‘‘என் பக்தையை அலட்சியப்படுத்தியதன் விளைவு தான் இது. குண்டுமணிகளை காணிக்கையாக அளிக்க அவளுக்கு வழிவிடுங்கள்’’ என அசரீரி ஒலித்தது. உடனே சேவகர்கள் சிதறிய குண்டுமணிகளை எடுத்து கொடுத்ததோடு  மன்னிப்பும் கேட்டனர். சகல மரியாதைகளுடன் சன்னதிக்கு அவளை அழைத்து வந்தனர். அவள் குருவாயூரப்பனை தரிசித்து காணிக்கை செலுத்தியதும் யானையின் மதம் அடங்கியது.
அந்த பக்தையின் நினைவாக இன்றும் குருவாயூரப்பன் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளன.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 
temple news
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.  * ... மேலும்
 
temple news
* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன். * உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும். * பிறவிக்குணம் என்பது ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar