Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒளிமயமான வாழ்விற்கு.... ... புத்ரதா ஏகாதசி விரத மகிமை புத்ரதா ஏகாதசி விரத மகிமை
முதல் பக்கம் » துளிகள்
இனி இல்லை எதிரி தொல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2022
02:02


நம் வளர்ச்சியைக் கண்டால் சிலருக்கு பிடிக்காது. நாம் அவர்களுக்கு எவ்வளவு தான் நல்லது செய்தாலும் நம்மை எதிரியாக கருதுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உறவினராகவோ, ஒரு காலத்தில் நண்பராக பழகியவராகவோ இருக்கலாம். சிலருக்கு தொழிலில் பங்குதாரராக கூட இருக்கலாம். இவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து நம்மை விடுவிப்பவராக காஞ்சிபுரம் திருப்பாடகம் பாண்டவதுாதப் பெருமாள் இருக்கிறார். 25அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் இவரை ரோகிணி நட்சத்திரத்தினர் தரிசிப்பது சிறப்பு.
 பாண்டவர்களுக்காக ஐந்து வீடுகளையாவது பெற்றுத் தரும் நோக்கத்துடன் துரியோதனனிடம் துாது சென்றார் கிருஷ்ணர். ஆனால் பாண்டவர்களின் பெரிய பலமாக விளங்கும் கிருஷ்ணரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். அவர் அமர்வதற்காக இருந்த ஆசனத்தின் அடியில் பாதாள அறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை மூடி மறைத்தான்.  ஆசனத்தில் கிருஷ்ணர் அமர்ந்ததும் அது சரிந்து விழுந்தது. அவரைத் தாக்கியவர்களை கிருஷ்ணர் கொன்றதோடு விஸ்வரூபத்தில் நின்றார். பின்னாளில் பாரத போர் முடிந்த பிறகு மகாராஜா ஜனமேஜயர் இத்தலத்தில் தவம் செய்து கிருஷ்ணரை தரிசிக்கும் பேறு பெற்றார். அந்த கிருஷ்ணரே பெருமாளாக இங்கு இருக்கிறார். சத்தியபாமா, ருக்மணி உடன் இருக்கிறார். இத்தலத்தின் புராணப்பெயர் திருப்பாடகம். இங்கு பலர் அடி, அங்கப் பிரதட்சணம் செய்கின்றனர்.பாண்டவருக்காக துாது சென்றதால் இவரை ‘பாண்டவ துாதப்பெருமாள்’ என அழைக்கின்றனர். நட்சத்திரங்களில் ஒருத்தியான ரோகிணி இங்கு வழிபட்டு சந்திரனை திருமணம் புரிந்ததாள். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ரோகிணி சூட்சும வடிவில் இங்கு வழிபடுவதாக ஐதீகம்.
எப்படி செல்வது?
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,

 
மேலும் துளிகள் »
temple news
ராமாயண காலத்தில் சீதையை, ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றான். அங்கு இருந்து சீதையை மீட்டு வர ராமனுக்கு, ... மேலும்
 
temple news
முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை ... மேலும்
 
temple news
பொதுவாக கோவில்களை ஹிந்து மதத்தவர் கட்டுவது வழக்கம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தினர் ஒருவர் அற்புதமான ... மேலும்
 
temple news
சோமவார பிரதோஷம், சிவராத்திரி சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இன்று சிவனை வழிபட மிக ... மேலும்
 
temple news
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar