மரக்காணம்: மரக்காணம் அடுத்த கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட முதலியார்பேட்டை கோவிலில் திருவிழா நடந்தது. இதனையொட்டி கடந்த 5ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து 9ம் தேதி வேல்பூஜை, தீ மிதித் தலும், அன்று இரவு அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் சாகை வார்த்தலும், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் நேற்று விழா நிறைவடைந்தது.