Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்: ... ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் திருக்கல்யாணம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்த் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்த் திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2022
05:02

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத்தேர்த் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசிமகத் தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றம் நடந்தது. முன்னதாக நேற்று இரவு கிராம சாந்தி நடந்தது. நேற்று காலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், தேருக்கு முகூர்த்தகால் பூஜை, கங்கணம் கட்டுதல், காலசந்தி பூஜை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் கோவிலை வலம் வந்து, யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு விஷ்வக்சேனர் ஆராதனை கலச ஆவாஹனம் நடந்தது.

கருட உருவம் பொறித்த கொடிக்கு, உபசாரங்கள் செய்து பஞ்ச தரிசனங்கள் முடிந்தபின்பு, கொடியை கோவிலை வலம் வந்து கொடிக்கம்பத்தின் கீழ் வைத்தனர். கருடாழ்வாருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர், பழவகைகள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்கார பூஜையும் தீபாராதனையும் செய்தனர். அதன்பின்பு கொடிமரத்தில் கருட உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. கோவிலில் இருந்து, சிறிது தூரம் தள்ளி இரு இடங்களில், மூன்று பருந்துகள் வானில் வட்டமிடும் வலம் வந்தன. அப்போது அப்போது தொகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான தாசர்கள் சேகண்டி அடித்தும், சங்கு ஊதினர். விழாவில்,14ம் தேதி கருட சேவையும், 15ல் பெட்டதம்மன் அழைப்பும், 16ல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 17ஆம் தேதி காலை,5:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன், அர்ச்சகர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர். விழாவில் ஸ்தலத்தார், மிராசுதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar