திருக்கோஷ்டியூரில் மாசித் தெப்பம்: விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2022 03:02
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாரயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு இன்று காலை தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளி குளத்தில் வலம் வருதல் நடந்தது. நாளை காலை சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியுடன் உத்ஸவம் நிறைவடைகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் தெப்ப உத்ஸவம் நடைபெறும். பிப்.,7 ல் கொடியேற்றப்பட்டு உத்ஸவம் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. இன்று காலை 9:30 மணி அளவில் கோயிலிலிருந்து தங்கப் பல்லக்கில் தேவியருடன் சுவாமி புறப்பாடு துவங்கியது. திருவீதி வலம் வந்து தெப்பக்குள மண்டத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜை, தீபாரதனை முடிந்து தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை வலம் வந்தார். குளக்கரையை சுற்றி பக்தர்கள் நின்று தெப்பத்தில் எழுந்தருளிய பெருமாளை வழிபட்டனர். தெப்பம் வலம் வந்தபின் பெருமாள் மீண்டும் தெப்பக்குள மண்டபம் எழுந்தருளினார். பக்தர்கள் சுவாமி தரிசனம் தொடர்ந்தது. இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனமும், குளக்கரையைச் சுற்றி விளக்கேற்றியும் பிரார்த்தனை செய்தனர். இரவு 9.00 மணிக்கு மீள் போலீஸ் எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக கூட்டத்தை விட கொரானா 3வது அலை காரணமாக பக்தர்களின் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.