பதிவு செய்த நாள்
16
பிப்
2022
06:02
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினத்தில் மாசிமக விழாவில் 6 பெருமாள்கள் தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் பொருமாளை வழிபட்டனர்.
காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரியில் மாசிமகா திருவிழாவை முன்னிட்டு நிரவி கரியமாணிக்க பெருமாள், திருமருகல் வரதராஜபெருமாள், திருப்பட்டினம் விழிவரதராஜ பெருமாள், திருப்பட்டினம் ரகுநாத பெருமாள், திருகண்ணபுரம் சவுரிராஜபெருமாள், திருப்பட்டினம் பிரசன்னாவெங்கடோச பெருமாள்,காரைக்கால் நித்தியகல்யாண பெருமாள், ரகுநாதர்பெருமாள் உள்ளிட்ட 8 பெருமாள் ஆண்டுதோறும் தனித்தனிப் பல்லக்கில் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி கலந்துகொள்ளுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு நித்தியகல்யாண பெருமாள், ரகுநாதர்பெருமாள் கோவில்களில் திருப்பணி நடைபெறுவதால் பெருமாள் தீர்த்தவாரிக்கு செல்லவில்லை. இதனால் 16.2.22 மாலை 4மணிக்கு மாசிமகத்தையொட்டி திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் பவளக்கால் சப்பரத்தில் தங்க கருட வாகனத்தில் 6 பெருமாள் முன்னிலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மேளதாளங்களுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி முடிந்து இரவு சாமி வீதி உலா நடந்தது.முன்னதாக அதிகாலை மறைந்த முன்னோர்களுக்கு கடல்கரையில் திதிகொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா ஆறுமுகம். நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி.கள் சுப்ரமணியன், நித்தின்கவால். பா.ஜ.க.,பிரமுகர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடல்கரை சூற்றி பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் கடல்கரையில் கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.