மதுரை: மதுரை கள்ளழகர் கோவிலில் மாசித் தெப்பதிருவிழாவை முன்னிட்டு கருட வாகனத்தில் கள்ளழகர் சேவை சாதித்தார்.
108 திவ்ய தேசத்தில் ஒன்றான மதுரை கள்ளழகர் கோயில் மாசித் தெப்பதிருவிழாவை முன்னிட்டு, திருமாலி்ருஞ்சோலை மாமலை (அழகர் கோவில்) கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் கஜேந்திர மோட்சம் முன்னிட்டு கருட வாகனத்தில் பொய்கைகரைப் பட்டியில் சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.