பழநி: பழநி மாசித் திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் உப கோவிலான மாரியம்மன் கோயிலில் ஜன.28 மூகூர்த்தகால் நடுதலுடன் மாசி திருவிழா துவங்கியது. பிப்.,2 அதிகாலை மாரியம்மன் கோயில் முன் அலங்கரிக்கப்பட்ட கம்பம் நடப்பட்டது. பிப்., 8 அன்று கொடியேற்றம் நடந்தது. கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது அதன்பின் பொதுமக்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். சிம்ம, வெள்ளி ரிஷப, யானை, தங்க குதிரை வாகனங்களில் மாரியம்மன் புறப்பாடு தினமும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பிப்., 15 திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்: இன்று (பிப்.16) அம்மன் கோவில் வருதல் பாதிரி பிள்ளையார் கோவிலில் இருந்து தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்று அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். மாலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. யானை கஸ்தூரி தேரை முட்டித் தள்ளியது. இரவு வண்டி கால் பார்த்தல் நடைபெற்றது. இன்று கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நடைபெற்று, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். விழா ஏற்பாடுகள் கோவில் இணை ஆணையர் நடராஜன், ஆணையர் செந்தில்குமார் செய்தனர்.