சின்னாளபட்டி: மாசி மகத்தை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பால், பன்னீர், இளநீர் தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது.
* சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது.