Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்காஞ்சி கோவிலில் மாசிமக தேர் ... குமாரப்பாளையத்தில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்திக்குப்பத்தில் மாசிமக தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
03:02

புதுச்சேரி: வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரியில் எழுந்தருளிய உற்சவர்களை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் மாசி மாத மகத்தன்று, கோவில்களில் உள்ள உற்சவமூர்த்திகளை கடற்கரைக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி நடத்துவது வழக்கம்.


அதன்படி, புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் 126ம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதையொட்டி, கடற்கரையில் நீண்ட பந்தல் அமைக்கப் பட்டிருந்தது.கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டிற்கு பின் நேற்று நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்திற்கு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன், செஞ்சி அரங்கநாதர், திண்டிவனம் சீனிவாச பெருமாள், மயிலம் முருகர், தீவனுார் விநாயகர், புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர், காந்தி வீதி காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், லாஸ்பேட்டை சிவ சுப்பிரமணியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து உற்சவர்கள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர்.சுவாமிகளுக்கு தீர்த்தவாரி செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்தனர். பலர் கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர், மோர் வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் மற்றும் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலமும், கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து போலீசாரும் கண்காணித்தனர்.இதேபோன்று வீராம்பட்டினம், காலாப்பட்டு கடற்கரைகளிலும், வில்லியனுார் சங்கராபரணி ஆறு, பாகூரில் தென்பெண்ணை ஆறு ஆகிய இடங்களிலும் மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது.கவர்னர் தரிசனம்கவர்னர் தமிழிசை நேற்று பகல் 12:30 மணி அளவில், வைத்திக்குப்பம் கடற்கரைக்கு வருகை தந்தார். கடற்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளிய பல்வேறு கோவில் உற்சவர்களை வணங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar