Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோவிலில் உற்சவர் உலா பழநி கோவில் உண்டியல் ரூ.2.61 கோடி காணிக்கை பழநி கோவில் உண்டியல் ரூ.2.61 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு
எழுத்தின் அளவு:
பல கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு

பதிவு செய்த நாள்

19 பிப்
2022
11:02

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக சுவாமி சிலைகள் மற்றும் புத்த மதம் தொடர்பான ஆவண குறிப்பு பேழைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில், காட்டேஜ் ஆர்ட்ஸ் எம்போரியம் என்ற கலை பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் உள்ளது.

திடீர் சோதனை: இங்கு, தொன்மையான பஞ்சலோக சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கூடுதல் எஸ்.பி., அசோக் நடராஜன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு ரகசிய விசாரணை நடந்து வந்தது. கலை பொருட்கள் விற்பனை செய்யம் நிலையத்தையும் கண்காணித்து வந்தனர். அங்கு பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததும், திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பார்சல் செய்யப்பட்ட நிலையில், இரண்டு நடராஜர் சிலைகள்; 1 அடி உயரம் உள்ள கிருஷ்ணர் சிலை மற்றும் கையெழுத்து பிரதியாக, புத்த மதம் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய, 11 பேழைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணை: இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று போலீசார் கூறினர். சிலைகள் மற்றும் பேழைகளின் தொன்மை குறித்து அறிய, மத்திய தொல்லியல் துறை நிபுணர்களின் உதவியை நாடி உள்ளனர். இந்த விற்பனை மையத்தை சேர்ந்த குர்ஷித் அகமது, 54, முஸ்தாக் அகமது, 59, ஆகியோரை விசாரணைக்கு அழைத்து உள்ளனர். மேலும், இதன் பின்னணியில் இருப்போர் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar