பெங்களூரு: தேவனஹள்ளியில் உள்ள கோட்டே வேணுகோபால சுவாமி கோவில் தருவிழா நடந்தது. 500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவில் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. அரசு கஜானாவிலிருந்து, வெள்ளி கிரீடம், தங்க கிரீடம், ரத்தின கற்கள் கொண்ட வைர தாமரை மாலை, முத்து மாலை உட்பட 21 வகையான மன்னர் காலத்தின் அபூர்வ நகைகள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன. திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.