கன்னிவாடி: மாங்கரையில் காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முன்னதாக சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், கண் திறப்பு, சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.