சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று(24.02.2022) காலை 5.30 மணிக்கு கோயிலிலிருந்து எழுந்தருளி நம்பிள்ளை சன்னதிக்கும் பின்னர் தவன மண்டபத்திற்கும் அடுத்து கங்கைகொண்டான் மண்டபத்திற்கும் எழுந்தருளி பெரிய மாட வீதியில் அங்கங்கு எழுந்தருளி நாச்சியார் கோலத்தில் பார்த்தசாரதி பெருமாள் ஸேவை ஸாதித்தார். ஏராளனமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.