பதிவு செய்த நாள்
25
பிப்
2022
06:02
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரியான மார்ச் 1ல் 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடி சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நடக்கிறது.
சிவராத்திரியன்று இம்மாவட்டத்தில் கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாவில் சுமார் 80 கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ள திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றியோடு, திருநட்டாலம் சிவன் கோயில்களில் பக்தர்கள் ஓடியும், வாகனங்களிலும் சென்றும் வழிபடுவர். காவி உடை தரித்து கையில் விசிறி, இடுப்பில் திருநீற்று பையுடன் கோபாலா, கோவிந்தா என்று கோஷமிட்டபடி பக்தர்கள் செல்கின்றனர். அன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.