முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா: மார் 8ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2022 03:02
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா வருகின்ற மார்ச் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி பால்குடத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மார்ச் 6 ஆம் தேதி சுமங்கலி பூஜையும், வரும் மார்ச் 8 ஆம் தேதி கணபதி பூஜையுடன், கொடியேற்றும் நிகழ்ச்சியும், காப்பு கட்டுதலும் நடைபெறுகிறது. மார்ச்.15 ஆம் தேதி கரகம், மது, முளைப்பாரி நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 16 ஆம் தேதி காலை காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் கரகம் பருப்பூரணியில் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 17 இரவு அம்மன் திருவீதி உலாவும் 16 ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.