மகா சிவராத்திரி: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2022 10:02
ராமேஸ்வரம்: மாசி மகாசிவராத்திரி விழா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்., 21ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 7ம் நாள் விழாவான நேற்று மாலை 5 மணிக்கு கோயிலில் தங்கப்பல்லக்கில் முத்தங்கி சேவையில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளி, கோயில் ரதவீதியில் உலா வந்தனர். அப்போது ரதவீதியில் காத்திருந்த பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.