சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2022 11:03
திருவாடானை: திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர் ஆகிய கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.நேற்று மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற வகையான அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தேவாரம், திருவாசகம் போன்ற பக்திபாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.