Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ள மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போர் மூள்வது அஞ்ஞானத்தால் தான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2022
05:03

 கோவை:இரு நாடுகளுக்கு இடையே போர் மூள்வது, மனிதருக்குள் பகை உணர்வால் நடக்கவில்லை; அவர்களுக்குள் இருக்கும் அஞ்ஞானத்தால் தான் பாதிப்புகளை சந்திக்கிறோம், என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார்.

கோவை ஈஷா யோக மையத்தில், 112 அடி ஆதியோகி சிலை முன் மஹா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. மாலை 6:00 மணிக்கு, தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் விழா துவங்கியது. லிங்கபைரவி தேவி மஹாயாத்திரை மற்றும் தியானம் நடந்தது. இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

விழாவில் சத்குரு பேசியதாவது: ஓராண்டில், 13 சிவராத்திரிகள் உள்ளன. அதில், மஹா சிவராத்திரி, மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இந்நாளில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தொடர்பால், நம்முள் உள்ள உயிர் சக்தி இயற்கையாகவே மேல் நோக்கி நகரும். இரவு முழுதும் நீங்கள் துாங்காமல் முதுகுத்தண்டை நேராக வைத்து விழிப்பாக இருந்தால், மகத்தான நன்மைகளை பெறமுடியும். உலகில் பல பிரச்னைகள் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் மூள்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் உள்ளன. இவை அனைத்தும் மனிதனுக்குள் இருக்கும் குற்றம் மற்றும் பகை உணர்வால் நடக்கவில்லை. அவர்களுக்குள் இருக்கும் அஞ்ஞானத்தால் தான் இவ்வளவு பாதிப்புகளை சந்திக்கிறோம். உங்களுக்குள் இருக்கும் ஞான ஒளியை இந்த மஹா சிவராத்திரி நாளில் ஏற்றி, விழிப்புணர்வான வாழ்வு நோக்கி நகர வேண்டும். உயிர்சக்தியை தெம்பாக்கி, வாழ்வை ஆனந்தமயமானதாக மாற்றிக் காட்டுங்கள். கொரோனா தொற்றால் இழந்த உற்சாகத்தை மீட்டெடுப்போம்.இவ்வாறு சத்குரு பேசினார்.லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், இந்தியாவுக்கான கொலம்பியா துாதர் மரியானா பெசேகோ மோன்டஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜருக்கு, வெளிநாட்டு பக்தர், ரூ. 25லட்சம் மதிப்புள்ள நவரத்தின ஆபரணம் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar